செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Tuesday, 16 April 2019

தேர்தல் ஓட்டு!

தேர்தல் ஓட்டு!

மக்களாட்சியில்
சாதாரண மனிதனின்
குரல் எங்கேனும் எடுபடுமா?

அடிப்படைகள் கிடைக்காத போது,
அநீதிகள் இழைக்கப்படும் போது,
உடமைக்கு குந்தகம் வரும் போது,
உண்மைக்கு தீமை ஏற்படும் போது,
ஊழல் தலைவிரித்தாடும் போது,
ஊடகங்கள் ஊமையான போது,

என்ன செய்வான் அப்பாவி மனிதன்?
எல்லாம் இழந்த மக்களிடமும்,
வலிமையான ஆயுதம் உள்ளது!
தேர்தலின் ஓட்டே அவ்வாயுதம்!

ஆம், ஓட்டு உங்கள் உரிமை!
எதிர்காலத்தினை தீர்மானிக்கும் கருவி!
ஒவ்வொருவரும் பொறுப்புணர்ந்தால்!
மாற்றம் நடந்ததே தீரும் நடந்தேறும்,
மக்கள் ஒன்றுபட நிற்க வேண்டும்,
உணர்ந்து செயல்பட வேண்டும்!

எட்டிக்கிடைக்காததற்கும்,
தட்டிப்பறிபோனதற்கும்,
விடை நம்கையிலே!
விழிப்போம்!
ஓர் ஓட்டு,
நாளை,
நமதே!

-செல்வா


No comments:

Post a Comment