செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 15 July 2019

நான்!

நான்!

மழை சாரலில் நனையும் நாணல் நான்,
பனித்தூரலில் மிளிரும் புல்வெளி நான்,

எத்தனை முறை உள்ளிழுத்தாலும் குறையாத மணல் நான்,
எத்தனை முறை அடித்தாலும் ஓயாத கடல் அலை நான்!

நான் யாராக இருந்தாலும்,
நான் நானாக உணர்ந்ததில்லை,
ஏதோ ஒன்று எனை துரத்துகிறது,
அதன் பெயர் மட்டும் அவ்வப்போது மாறுகிறது,
சிலநேரம் சடங்கு, பலநேரம் கடமை,
சிலநேரம் சமுதாயம், பலநேரம் கடன்!

அத்தனையும் என்னிலிருந்தும் ஒன்றுமில்லாதவனானேன் பலநேரம்,
என்னை மறந்த நேரங்களில் மட்டுமே நான் நானாக இருந்ததை உணர்ந்தேன்!

நான் யாரோ, நான் அறிவேனோ!

-செல்வா

No comments:

Post a Comment