வாழ்க்கை வரமா? சாபமா?
வாழ்க்கை வரமா சாபமா,
கேள்விகளிலே ஓடுகிறது
விடை தான் தெரியவில்லை!
எதையும் கனவிலே காண்பது சாபம்!
எதையும் கையிலே உண்டாக்குவது வரம்!
எதற்கும் பிறரை நாடியிருப்பது சாபம்!
எதற்கும் பிறருக்கு கொடுத்தளிப்பது வரம்!
கையில் எதுவும் வந்த உடன்
காணமல் செய்வது சாபம்!
கையில் ஈட்டியதை எப்படியாவது
இரட்டிப்பாக்குவது வரம்!
இவ்வுலகில் செய்வதற்கு ஆயிரம் உள்ளது!
இவ்வுலகில் பேர் பெருவதற்கு ஆயிரம் உள்ளது!
எது நமது என்று தேடி அதை நாடி
அதில் ஆடிப் பாடி நெகிழ்க வாழ்வு வரமாகும்!
-செல்வா






