தனித்தன்மை!
தனித்திரு தனியாக எழு,
பிறரின் எதிரொலியாகாதே,
உனக்கான குரலாய் நீயே இரு!
பிறரை நகலெடுக்காதே,
தனக்கான சாயலாக நீயே,
வடிவமைத்துக்கொள்வாயாக!
இறைவன் படைப்பில் யாவரும் ஒன்றில்லை,
ஒரே மாதிரி படைக்கப்படவுமில்லை,
ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்!
தன்னகத்தை திறமை புதைந்து வைத்திருப்பவர்!
இதை கண்டறிந்தவர் வெல்வார்!
முதலில் நமது திறமையை கண்டறிவோம்,
பின்பு அதனை நன்றாக வளர்ப்போம்!
இறுதிவரை அதன் பலன் நிழல் போல் நமக்குத்தரும்!
விழி.எழு.விருட்சமாகுக!
-செல்வா!




