தீர்வு!
வலிமிகு காலங்களில் கூட வழி உண்டு!
இரு விழி உடன் நேர்க்கொண்டு நோக்க!
புலி மிகு காட்டில் கூட புகலிடம் உண்டு!
புத்தி கொண்டு தெளிவாய் நோக்க!
அல்லதை நாளும் மனதில் வளர்ப்பவன்,
ஊடு பயிர் போல் காற்றடிக்க சாய்ந்திடுவான்!
நல்லதை நாளும் மனதில் வளர்ப்பவன்,
நெடு மரம் போல் காற்றடிக்க நிலைத்திடுவான்!
நம் கையில் இருப்பது மூலதனம்,
நல்ல வித்து வளர்ந்து நன்மரமாகும்,
நல்லெண்ணம் நல்ல வெற்றியாகும்!
கனவு கலைவதும் விளைவதும் நம் கையிலே!
விழி.எழு.விருட்சமாகுக!
-செல்வா!




