செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 25 May 2020

அமிலம்!

அமிலம்!

ஒரு விதத்தில் சொல்லப்போனால்,
உணர்வுகள் மனதை அரிக்கும் அமிலம் போலும்!

தேங்கி நிற்க நிற்க மனதை அரித்துவிடும்,
வழிந்து ஓட படும் இடமெல்லாம் சுட்டு விடும்!

மனதில் உள்ள அமிலத்தை
மதி கொண்டு சிறுக சிறுக
நீர்த்துப்போக செய்யாவிடில்,
மெல்ல மெல்ல சிதைத்துவிடும்
மனக் குடுவையை!

கண்ணாடியாய் மனதை மாற்றினால்,
எந்த வித அமிலத்திற்கும் தாக்குப்பிடிக்கும்!
எத்தனை காலத்திற்கும் மாறாமலிருக்கும்!

உணர்வுகளுக்கும் உயிர் உண்டு,
அதனை பாதுகாப்புடன் கையாளுவீர்!

-செல்வா!

2 comments: