செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 16 May 2020

இசைமழை!

இசைமழை!

இனிமை பொங்கும், 
இன்னிசை மாமழை!

மனதில் தூறும் ஓர் அலை,
மகிழ்வு தரும் பேரலை!

இசை அளப்பறியா கொடை,
இசை மனதை ஈர்க்கும் மழை!

இசையில் நனையாத இதயம் காணீரோ,
இளமை தளிரும் தருணம் மீண்டும் கண்டீரோ!

இசையின் தொண்டு இனிதாகும்,
இளமை கூட்டும் பண்பாகும்! 

இசை மழையிலே நாம் நனைவோம்,
இளமையினை நான் உணர்வோம்!

நாளும் புதிதாகும் இசையாலே,
இன்றும் என்றும் என்றென்றும்!


-செல்வா!

No comments:

Post a Comment