இசைமழை!
இனிமை பொங்கும்,
இன்னிசை மாமழை!
மனதில் தூறும் ஓர் அலை,
மகிழ்வு தரும் பேரலை!
இசை அளப்பறியா கொடை,
இசை மனதை ஈர்க்கும் மழை!
இசையில் நனையாத இதயம் காணீரோ,
இளமை தளிரும் தருணம் மீண்டும் கண்டீரோ!
இசையின் தொண்டு இனிதாகும்,
இளமை கூட்டும் பண்பாகும்!
இசை மழையிலே நாம் நனைவோம்,
இளமையினை நான் உணர்வோம்!
நாளும் புதிதாகும் இசையாலே,
இன்றும் என்றும் என்றென்றும்!
-செல்வா!
இனிமை பொங்கும்,
இன்னிசை மாமழை!
மனதில் தூறும் ஓர் அலை,
மகிழ்வு தரும் பேரலை!
இசை அளப்பறியா கொடை,
இசை மனதை ஈர்க்கும் மழை!
இசையில் நனையாத இதயம் காணீரோ,
இளமை தளிரும் தருணம் மீண்டும் கண்டீரோ!
இசையின் தொண்டு இனிதாகும்,
இளமை கூட்டும் பண்பாகும்!
இசை மழையிலே நாம் நனைவோம்,
இளமையினை நான் உணர்வோம்!
நாளும் புதிதாகும் இசையாலே,
இன்றும் என்றும் என்றென்றும்!
-செல்வா!

No comments:
Post a Comment