செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 11 May 2020

வெண்மேகம்!

வெண்மேகம்!

வான் கொண்ட மலை மேலே,
வெள்ளை பூப்பூவாய் மேகங்கள்!

மான் கொண்ட புள்ளி போலே
வெள்ளை மேகக்கோலங்கள்!

கண் கொண்டு காணும் காட்சி,
கனவிலும் தோன்ற இயலுமோ!

கண் கொண்டு காணும் காட்சி,
நினைவிலும் பிடிக்க இயலுமோ!

இயற்கையின் எழில் முன் 
மனித கற்பனைகள் தோற்குதே! 
கவிதை வரைய மனமும் ஈர்க்குதே! 
அழகினை புகழ சொற்பஞ்சமாகுதே! 

இயற்கை எழிலே எழில்!


-செல்வா

No comments:

Post a Comment