செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Tuesday, 24 December 2019

புலரும் காலை!

புலரும் காலைப்
பனியும் விலகும்

நீர்த்துளியும் ததும்பும்,
பொன்னொளியும் நிரம்பும்!

வைகறை விடியல் வாசம் தேடி,
கங்குல் ஒடியும் சுவாசம் தேடி!

நிலவினை மறையச்சொல்லி,
புதுக் கதிரினை நிரப்பச்சொல்லி!

எனை வாட்டும் குளிர் தனையும்,
அதில் வாடும் உடல் தனையும்,
உயிரூட்டும் பொழுதே
இவ்வழகிய எழில்
காலை பொழுது!

-செல்வா!

Friday, 6 December 2019

பார்வை!

பார்வை அழகானால் தெரிபவை அழகாகும்!
பார்வை தெளிவானால் தெரிபவை தெளிவாகும்!
பார்வை நேர்த்தியானால் தெரிபவை நேர்த்தியாகும்!

காணும் பொருளில் இல்லை அழகு,
காண்பவர் பார்வையில் உள்ளது அழகு!

நோக்கார் நோக்க புதுயுகம் பிறந்தது!
பறவையை நோக்க விமானம் பிறந்தது!
அகிம்சையை நோக்க சுதந்திரம் பிறந்தது!

இருப்பவை உலகில் அங்ஙனமே இருக்கிறது!
பார்ப்பவர்களின் பார்வையில் புதுயுகம் பிறக்கிறது!
பார்வையை தேற்றினால் பார் நம்வசம்!

வாரீர் தேற்றுவோம்!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா!


Thursday, 5 December 2019

இளையராஜாவின் இசை!

இளையராஜா இன்னிசையில் நனைந்தால் குளிர் அடிப்பதில்லை ஏனோ?

திகட்டாத இன்பமா இசை?
சலிக்காத இன்பமா இசை?

வலி போக்கும் மருந்திசையா?
களிப்பாக்கும் விருந்திசையா?

மனதினை மாற்றவும்,
மனமதை தேற்றவும்,
வலிமை இசைக்குண்டு!

இசைப்பார் இசைக்க இறைவனே பள்ளி கொள்ளும் பொழுது!
நான் என்ன அற்ப மனிதன் தானே!

இசை மழையே எனை நனைத்திடுவாயாக!

-செல்வா!

Wednesday, 4 December 2019

மனத்தோட்டம்!

மனதின் தோட்டத்தில்,
மல்லிகை மலரட்டும்,
நறுமணம் கமழட்டும்,
வண்டுகள் சூழட்டும்!
தேனீக்கள் அமரட்டும்!
மனதின் தோட்டத்தை
மகிழ்வின் தோட்டமாக்குக!

விதை விதைத்தால் மட்டும் மரமாகாது!
உரமிட்டு, பாத்தி கட்டி களையெடுத்து காக்க,
இட்டது மல்லிகையெனில் நறுமணம் நாடெங்கும் கமழும்!
கலையெடுத்து காக்காவிடில்
மல்லிகை மணமில்லாததாகிவிடும்!

மனதை பேணும் கடமையை நாளும் செய்வோம்!
உழவனுக்கே விளைச்சலின் மகசூல் கிட்டும்!

-செல்வா!