புலரும் காலை!
புலரும் காலைப்
பனியும் விலகும்
நீர்த்துளியும் ததும்பும்,
பொன்னொளியும் நிரம்பும்!
வைகறை விடியல் வாசம் தேடி,
கங்குல் ஒடியும் சுவாசம் தேடி!
நிலவினை மறையச்சொல்லி,
புதுக் கதிரினை நிரப்பச்சொல்லி!
எனை வாட்டும் குளிர் தனையும்,
அதில் வாடும் உடல் தனையும்,
உயிரூட்டும் பொழுதே
இவ்வழகிய எழில்
காலை பொழுது!
-செல்வா!
புலரும் காலைப்
பனியும் விலகும்
நீர்த்துளியும் ததும்பும்,
பொன்னொளியும் நிரம்பும்!
வைகறை விடியல் வாசம் தேடி,
கங்குல் ஒடியும் சுவாசம் தேடி!
நிலவினை மறையச்சொல்லி,
புதுக் கதிரினை நிரப்பச்சொல்லி!
எனை வாட்டும் குளிர் தனையும்,
அதில் வாடும் உடல் தனையும்,
உயிரூட்டும் பொழுதே
இவ்வழகிய எழில்
காலை பொழுது!
-செல்வா!




