செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 28 January 2019

மகளுக்கு ஒரு மடல்!

மகளை பெற்றதினால் பாக்கியமுற்றேன்,
தாயை தூக்கி தாலாட்டும் பாக்கியம் பெற்றேன்,

தங்கை, அக்கா கோராத அளவில் உரிமை கோருகிறாயே,
தாய், தாரமிடம் இல்லாத அளவில் அதிகாரம் செய்கிறாயே,
எளிதில் கோபிக்கும் எந்தன் சுபாவத்தை தகர்த்தெறிந்தாயே!
வடிவமில்லாமல் இருந்த என் வாழ்விற்கு வடிவை தந்தாயே!

உன்னை பெற்றதால் எந்தன் வாழ்வு பூர்த்தியுற்றதோ?
உன்னை ஆரத்தழுவியதால் பாவம் அற்று தீர்ந்தனவோ?

அப்பா என்ற ஒரு வார்த்தையில் கட்டிப்போடும் மரகதமே,
மணாளன் வீடு புகும் மங்கையே, கணவனிடம் தந்தையை தேடாதே!
உன் வாழ்வு சிறக்கட்டும் வீடு தழைக்கட்டும்!

-செல்வா

Monday, 14 January 2019

பொங்கலோ பொங்கல்!

தை திருநாள் தமிழர் பண்பாட்டு பெருநாள்,
நாடு செழித்து மகிழும் திருநாள்!
இனிப்பாய் தித்திக்கும் நனிநாள்!

பழையது கழிந்தது,
புதியது மலர்ந்தது,
நல்ஆண்டு பிறந்தது,
தமிழில் தை பிறந்தது,

இடர்கள் ஓடட்டும்,
இன்னல் தீரட்டும்,

வீடு சிறக்கட்டும்,
நாடும் வளரட்டும்,
காடு செழிக்கட்டும்,
கால்நடை வாழட்டும்,
இன்பம் பொங்கட்டும்,
நல்லவை தொடரட்டும்,
நல்லவர்கள் பெருகட்டும்,
தொழில்கள் முன்னேறட்டும்,
பண்பாடு தழைத்து ஓங்கட்டும்,
தமிழ் எத்திசையும் முழங்கட்டும்,

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

🌞🌾🌱🌴🌲🌳✨

-செல்வா



Thursday, 3 January 2019

புத்தாண்டு 2019!

மழை தரும் மேகங்களே வாருங்கள் புது வருடம் வந்தது!
தேன் சுரக்கும் பூக்களே மலருங்கள் புது வருடம் வந்தது!

அலுவலகத்தில் ஆண்டு இலக்கு இருப்பது போல்,
உங்களுக்கு ஆண்டு இலக்குகள் இல்லையோ!

சென்ற வருடம் பெய்யாத மழையே இந்த வருடம் இதமாக பெய்க!
கடந்த ஆண்டு முகம் மாற்றிய இயற்கையே இவ்வாண்டு காப்பாயாக!

கரை புரண்டு ஓடும் காவிரி வேண்டும்!
நாலு  போகம் விளையும் மண் வேண்டும்!
தமிழ் மணம் வீடெங்கும் கமழ வேண்டும்!

இளைய தலைமுறைக்கு நல்ல வேலை வேண்டும்!
நாட்டை ஆள தகுதியான கோமான் வேண்டும்!

விண்ணும் மண்ணும் மக்கள் மகிழ்ச்சியில் முழங்கிட வேண்டும்!
இந்தாண்டில் இத்தனையும் நிகழ்ந்தேற வேண்டும்!

வேளாண்மை வளர வையகம் தழைக்கட்டும்!
வாழும் நாளில் சொர்க்கமாக இவ்வாண்டு மலரட்டும்!
நாடெங்கும் குறையில்லாமல் மக்கள் மனம் நிறையட்டும்!

-செல்வா