விட்டுவிடாதே
விட்டுவிடாதே எட்டிப்பிடி
வானம் உன் வசமாகும்
அந்நாள் தூரமில்லை!
கனவு கண்டு களத்தில் நின்று
முயற்சி பூண்டு வெற்றி கண்டு
வானை வசப்படுத்தும் நேரமிது!
உன்னுள் உதித்த கனவுக்கதிரை
கயிறாய் பிடித்து களத்தில் குதித்து
வாகை சூடிடு வழி காட்டிடு!
எத்தனை பேர் உலகில் சாதித்தனரோ
அத்தனை பேர் இதைச்செய்தனரே!
விழி.எழு.விருட்சமாகுக!
-செல்வா!

No comments:
Post a Comment