செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Sunday, 10 July 2022

மழை!

மழை!


எந்தன் மாலை இத்தனை நறுமணம் வீசுகின்றது ஏனோ?

மழையே உந்தன் வருகைதான் காரணமா என்ன?


மண் குளிர்ந்து மணக்கின்றது!

புல் சிலிர்த்து நீர்த்துளி சுமக்கின்றது!

மரம் நனைந்து பசுமையாய் தளிர்க்கின்றது!

பூக்கள் பூத்தவண்ணம் சொரிகின்றது!


எந்தன் மாலை இத்தனை அழகானால்!

தினம் உன் வரவை எதிர்பார்ப்பேன்!

வந்து வண்ணங்கள் சேர்த்திடு மழையே!


-செல்வா!

#tamil #tamilquotes #tamilpoem #tamilkavithai #quote #quoteoftheday #iniyatamilselva #quotestagram  

No comments:

Post a Comment