மழை!
எந்தன் மாலை இத்தனை நறுமணம் வீசுகின்றது ஏனோ?
மழையே உந்தன் வருகைதான் காரணமா என்ன?
மண் குளிர்ந்து மணக்கின்றது!
புல் சிலிர்த்து நீர்த்துளி சுமக்கின்றது!
மரம் நனைந்து பசுமையாய் தளிர்க்கின்றது!
பூக்கள் பூத்தவண்ணம் சொரிகின்றது!
எந்தன் மாலை இத்தனை அழகானால்!
தினம் உன் வரவை எதிர்பார்ப்பேன்!
வந்து வண்ணங்கள் சேர்த்திடு மழையே!
-செல்வா!
#tamil #tamilquotes #tamilpoem #tamilkavithai #quote #quoteoftheday #iniyatamilselva #quotestagram

No comments:
Post a Comment