செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Tuesday, 19 March 2019

பொள்ளாச்சி கொடூரம்!

தெரியாமல் யாருமில்லை,
உணராமல் தான் உள்ளோம்!

மெத்த படித்து பயன் என்ன?
ஊட்டி வளர்த்து பயன் என்ன?
காம ஆசை தலைவிரித்தாடுது!
காசு பார்க்க கண்டவழி தேடுது!

இங்கு காசு தான் எல்லாம் என சொல்லி வளத்தாச்சு!
தானும் தன்னதும் முக்கியம்னு சொல்லிமுடிச்சாச்சு!
பிறருக்கு வலிச்சா என்ன,
இல்லை பிறர் குடி கெட்டா என்ன?

இன்று நடந்த சம்பவம் பெரும் துயரம்!
இனி இது நடக்காமல் இருக்க உறுதிகொள்க!

பெற்றோர்களே ஆண்பிள்ளையை சொல்லி வளர்க்க!
பெண்பிள்ளையை உரக்க பேசும்படி வளர்க்க!

சமுதாயமே தவறுகளை தட்டிக்கேட்க!
சட்டமே தீங்கானவர்களை சிறையிடுக!

இது நம் அனைவருக்குமான கடமை!
இன்று நமது வீடு தீக்கிறையாகாமல் இருக்கலாம்!
நாளை மாறாவிடில் என்ன நிச்சயம்?

பெண்மையின் பெருமை பேசாது!
பெண்ணை சகமனுசியாய் பார்ப்போம்,
மதிப்போம்! உணர்வோம்!

-செல்வா

Sunday, 10 March 2019

யாரை நம்புவது!

கைரேகை பார்த்து பார்த்து
பல ராசிக்கற்கள் அணிந்து
தனம் சேருமா பணம் சேருமா
என தவித்தான் அக்காலத்தில்!

இன்றோ குன்றேரா சாமிகள்,
காட்டை அழித்த பாவிகள்,
கோடியில் புரளும் கேடிகள்,
சில்மிசம் செய்யும் பாதிரிகள்,
எத்தனை ஏமாற்றுக்காரர்கள்?
யாரை நம்புவது என்ற நிலை!
அப்பாவி மனிதன் அல்லாடுகிறான்!

தன்னை சாமி என்கிறான் பாவி!
எதை துறந்தான் துறவியாவதற்கு?
பகுசாய் பங்களா, சொகுசாய் வாகனம்,
சேவைக்கு சேவகர்,ஆசைக்கு சர்வம்,
காசுக்கு தரிசனம்,கார்ப்பரேட் விளம்பரம்,
இத்தனையும் இக்கால (ஆ)சாமிகளிடத்தில் உண்டு!
இதை கண்டு குழம்பாமல் இருப்பவன் வாழ்வு நன்று!

மதம் தலைக்கேறினால் மதயானையின் கதிதான்!
மதம் புனிதமானது இத் தரகர்கள் அபாயமானவர்கள்!

மெய்பக்தி அப்பழுக்கற்றது!
யாருக்கும் தீங்கிழைக்காதது!
வேடம் பூண்ட கயவன் கொடியவனே!
மத போதையில் மனிதம் இழக்காதீர்!


-செல்வா

Sunday, 3 March 2019

மனமென்னும் மாயாவி!

மனமென்னும் மாயாவி
தறிகெட்டு ஓடுதே!
அச்சாணி கழன்ற வண்டியாகி தடம் கெட்டு புரளுதே!

எதை செய்ய வேண்டுமோ,
அதை செய்வதில்லையே,
நேரம் வீணாக்கும் பேதையாய்,
காலம் கடத்தி விரயமாகுதே!

சாதித்தவன் முதலில்
மனதை அடக்கினான்
மமதை அகற்றினான்
பற்றை கொண்டான்
எச்சுகம் இழப்பினும்
இலக்கை தொடவேண்டும்
வெற்றி பெற்றாக வேண்டும்
என்பதை இயல்பாக்கினான்!

வெற்றிக்கு தெரிந்தால் மட்டும் போதுமா?
செயல்படாத இரும்பு துருப்பிடிக்கும்
கட்டுப்படுத்தாத மனது தறிகெடும்
அறிந்து தெரிந்து செயல்படு மனமே!
தாமதம் கொள்ளாதே, காலம் சிறிதே நம்மிடம்!

-செல்வா