செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Thursday, 4 February 2021

கர்மா!

 கர்மா!


கடவுளை ஏன் கேட்கிறாய்!

சிந்தை செய்து பார் மனமே,

ஒரு முறை கூட மனதிடம் கேளாயோ?


விதைத்த விதை என்றும் உறங்காதே,

அது போலே நினைத்த நினைவும் என்றும் உறங்காதே! 


கருத்தினை கனவில் கொண்டு!

நினைப்பினை மனதில் கொண்டு!

செய்கையை கையில் கொண்டு!

உண்மையை கண்டுகொண்டு!

மெய்மையை உணர்வோம்!

வாழ்வினில் உயர்வோம்!


கடவுளிடம் முறையிட நேரமில்லை!

நன்றி பட்டியல் முடிவதற்குள்! 


-செல்வா!


No comments:

Post a Comment