கர்மா!
கடவுளை ஏன் கேட்கிறாய்!
சிந்தை செய்து பார் மனமே,
ஒரு முறை கூட மனதிடம் கேளாயோ?
விதைத்த விதை என்றும் உறங்காதே,
அது போலே நினைத்த நினைவும் என்றும் உறங்காதே!
கருத்தினை கனவில் கொண்டு!
நினைப்பினை மனதில் கொண்டு!
செய்கையை கையில் கொண்டு!
உண்மையை கண்டுகொண்டு!
மெய்மையை உணர்வோம்!
வாழ்வினில் உயர்வோம்!
கடவுளிடம் முறையிட நேரமில்லை!
நன்றி பட்டியல் முடிவதற்குள்!
-செல்வா!

No comments:
Post a Comment