செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Friday, 19 February 2021

 வீரா!


சென்று வா வீரா!

வென்று வா வீரா!


வாழ்க்கை ஓர் போர்களமோ,

வாழ்க்கை ஓர் பூக்களமோ!

உன் எண்ணத்தின் கண் முன் நிற்கிறது! 



போர்க்களமும் பூக்களமே மனமிருந்தால்,

பூக்களமும் போர்க்களமே முள்ளை மட்டும் பார்த்தால்!


வலியவனும் மெலியவனே எண்ணாவிடில்!

மெலியவனும் வலியவனே தீர எண்ணிவிடில்!


விடியல் உண்டு விழித்துக்கொள்!


விழி.எழு.விருட்சமாகுக!




Thursday, 4 February 2021

 கர்மா!


கடவுளை ஏன் கேட்கிறாய்!

சிந்தை செய்து பார் மனமே,

ஒரு முறை கூட மனதிடம் கேளாயோ?


விதைத்த விதை என்றும் உறங்காதே,

அது போலே நினைத்த நினைவும் என்றும் உறங்காதே! 


கருத்தினை கனவில் கொண்டு!

நினைப்பினை மனதில் கொண்டு!

செய்கையை கையில் கொண்டு!

உண்மையை கண்டுகொண்டு!

மெய்மையை உணர்வோம்!

வாழ்வினில் உயர்வோம்!


கடவுளிடம் முறையிட நேரமில்லை!

நன்றி பட்டியல் முடிவதற்குள்! 


-செல்வா!


Wednesday, 3 February 2021

 தேடல்!


தேடினால் தானே புதையல் கிடைக்கும்?


தேடாமல் தேவதை கிடைத்தாலும்!

தேடாமல் தேவாமிருதம் கிடைத்தாலும்!

பவுசும் மவுசும் ஒருபோதும் கிடைத்ததில்லை!


தேடி அடைவதே வாழ்வின் பயணம்!

தேடி தொலைவதே வாழ்வின் பயணம்!


தேடல் கிடைத்தாலும் வாழ்க்கையில் வெற்றி!

தேடல் கிடைக்காவிடில் அனுபவத்தில் வெற்றி!


தேடித்தொலைந்திடுவோம்!

தொல்லைகளே தெரியாத களமிது!


தயாரா...தகுதி பெற...தயாரா!


-செல்வா