வீரா!
சென்று வா வீரா!
வென்று வா வீரா!
வாழ்க்கை ஓர் போர்களமோ,
வாழ்க்கை ஓர் பூக்களமோ!
உன் எண்ணத்தின் கண் முன் நிற்கிறது!
போர்க்களமும் பூக்களமே மனமிருந்தால்,
பூக்களமும் போர்க்களமே முள்ளை மட்டும் பார்த்தால்!
வலியவனும் மெலியவனே எண்ணாவிடில்!
மெலியவனும் வலியவனே தீர எண்ணிவிடில்!
விடியல் உண்டு விழித்துக்கொள்!
விழி.எழு.விருட்சமாகுக!



