செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 27 March 2021

அறுந்த வால்!


அறுந்து போன வால ஒட்ட முடியாது!

அதுபோல கடந்துபோன காலத்தை

நினைத்து பலன் கிடையாது!


சிலநேரம் எண்ணிப்பார்க்கலாம்,

சிலநேரம் வருந்தியும் பார்க்கலாம்!

ஏன் சில நேரம் கண்ணீர் கூட விடலாம்!


இறுதியில் கடந்த காலம் கடந்ததே!

முடிந்ததை எண்ணி எண்ணி

இயன்றதை விடாதே!

கடந்ததை எண்ணி எண்ணி

கனத்து விடாதே!


இன்றும் இன்றைய கணமும் நிச்சயம்!

ஏதேனும் செய்ய மீதம் இருந்தால் செய்திடு!

இல்லையேல் புதிதாய் பிறந்தோம் என நினைத்திடு!


வரும் நாள் வசந்தமாகட்டும்!

வாழ்க்கை இன்பமாகட்டும்!


-செல்வா!