செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 19 December 2020

 எழுந்து வா!


மீண்டும் ஒரு கனவை சுமக்கிறது இம்மனது!

மீண்டு எழ துணை போகிறது இக்கனவு!


மாண்டு மண்தனில் விழுந்த போதிலும் 

மாந்தர் சூழ்ச்சிதனில் வீழ்ந்த போதிலும்! 

புறமுதுகினை காட்டாத தனித்துவம் எனது!


தோற்றாலும் நேர்மையின் கண் தோற்பேன்!

வென்றாலும் வாய்மையின் கண் வெல்வேன்!


இது என் அறம் தமிழ் தந்த வரம்!

இது என் நடை தமிழ் தந்த கொடை!


மீண்டும் ஓர் புதிய கனவு புதிய தொடக்கத்திற்கான அரிய நிகழ்வு!


எழுந்து வா!


விழி.எழு.விருட்சமாகுக!


-செல்வா!