செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Monday, 3 February 2020

வாய்ப்பு!

வாய்ப்பு!

வாய்ப்புக்கள் வாசலிலே கொட்டிக்கிடக்கு,
சிறப்புக்கள் சீமையிலை கொட்டிக்கிடக்கு!
சீர் தூக்க ஆளில்ல, சிந்திக்க வழியில்ல,

நாள் தோறும் பேசி என்ன பயன்?
நாள் தோறும் பார்த்து என்ன பயன்?
நாள் தோறும் கேட்டு என்ன பயன்?

முந்திக்க பாரு முன்னேறலாம், முயன்றா மட்டுமே விண்ணை தொடலாம்!

முந்திக்க வழிபிறக்கும்,
சந்திக்க துணிவு பிறக்கும்!
உன்னை யார் தடுப்பா?
தடுப்பார் யாருமில்லை,
தடையோ பெரிதுமில்லை!

புத்தி கொண்டு எதை செய்தால்,
வெற்றி கிடைக்கும் என்று பாரு!
வெற்றி கொண்டு வந்தவன்,
புத்தியாளே எட்டினான்!
மற்றவரோ கைகட்டி நோக்கினார்!

பிழைத்தவன் பிழைத்தான்,
தன் முயற்சியாளே!

விழி.எழு.விருட்சமாகுக!

-செல்வா!

2 comments: