மழைமேகம்!
கருங் கூந்தல் கொண்டு சிணுங்கி
ஊரெல்லாம் வனப்பில் ஆழ்த்துபவளே!
பரும் தூரல் கொண்டு முழங்கி காடெல்லாம் செழிப்பில் ஏற்றுபவளே!
அவனி எங்கும் உலவும் மங்கை,
எவரிடத்திலும் தங்கிடாத மடந்தை,
எட்டுத்திக்கும் ஒலிக்கும் சலங்கை,
காடென, மேடென, கடலென, புனலென,
வஞ்சகம் பாரமல் முத்தும் குழந்தை!
தினம் தினம் விருந்தளிக்க இந்நிலம் காத்திருக்கு,
உனது வரவு வேண்டி பல உயிர்கள் தவித்திருக்கு,
பருவம் தவறாமல் வந்து என் வயதை கூட்டிடு!
புருவம் உயர்த்த நீ விண்ணில் வீற்றிரு!
பஞ்சனை தருகிறோம்,
ரத்தின கம்பளம் விரிக்கிறோம்,
விருந்தினராய் வந்து செல்லாமல்,
வீற்றிருக்க வந்திடு விடைபெறாமல் வீற்றிரு!
-செல்வா
கருங் கூந்தல் கொண்டு சிணுங்கி
ஊரெல்லாம் வனப்பில் ஆழ்த்துபவளே!
பரும் தூரல் கொண்டு முழங்கி காடெல்லாம் செழிப்பில் ஏற்றுபவளே!
அவனி எங்கும் உலவும் மங்கை,
எவரிடத்திலும் தங்கிடாத மடந்தை,
எட்டுத்திக்கும் ஒலிக்கும் சலங்கை,
காடென, மேடென, கடலென, புனலென,
வஞ்சகம் பாரமல் முத்தும் குழந்தை!
தினம் தினம் விருந்தளிக்க இந்நிலம் காத்திருக்கு,
உனது வரவு வேண்டி பல உயிர்கள் தவித்திருக்கு,
பருவம் தவறாமல் வந்து என் வயதை கூட்டிடு!
புருவம் உயர்த்த நீ விண்ணில் வீற்றிரு!
பஞ்சனை தருகிறோம்,
ரத்தின கம்பளம் விரிக்கிறோம்,
விருந்தினராய் வந்து செல்லாமல்,
வீற்றிருக்க வந்திடு விடைபெறாமல் வீற்றிரு!
-செல்வா


