செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Sunday, 15 September 2019

மழைமேகம்!

கருங் கூந்தல் கொண்டு சிணுங்கி
ஊரெல்லாம் வனப்பில் ஆழ்த்துபவளே!

பரும் தூரல் கொண்டு முழங்கி காடெல்லாம் செழிப்பில் ஏற்றுபவளே!

அவனி எங்கும் உலவும் மங்கை,
எவரிடத்திலும் தங்கிடாத மடந்தை,
எட்டுத்திக்கும் ஒலிக்கும் சலங்கை,
காடென, மேடென, கடலென, புனலென,
வஞ்சகம் பாரமல் முத்தும் குழந்தை!

தினம் தினம் விருந்தளிக்க இந்நிலம் காத்திருக்கு,
உனது வரவு வேண்டி பல உயிர்கள் தவித்திருக்கு,
பருவம் தவறாமல் வந்து என் வயதை கூட்டிடு!
புருவம் உயர்த்த நீ விண்ணில் வீற்றிரு!

பஞ்சனை தருகிறோம்,
ரத்தின கம்பளம் விரிக்கிறோம்,
விருந்தினராய் வந்து செல்லாமல்,
வீற்றிருக்க வந்திடு விடைபெறாமல் வீற்றிரு!

-செல்வா

Saturday, 14 September 2019

மீண்டெழும் தமிழ்!

தமிழை முடக்க மாபெரும் முயற்சி!
தமிழை ஒடுக்க மாபெரும் பயிற்சி!

சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி என துரத்தும் ஓர் பட்டியல்,
ஆதிக்க வழியையும், ஆதிக்க போரிலும் சாதித்தது தமிழ் தான்!

அந்நிய மொழியை மதத்தில் ஏற்றி கருவரை மொழியாக மாற்றினர்!
இன்னொரு மொழியை வளர்ச்சியாக காட்டி வீட்டினுள் ஏற்றினர்!
மற்றொரு மொழியை திணித்து ஒருமைப்பாடு காக்க நினைத்தனர்!

ஊடுருவி பார்த்தனர், அழிக்க முடியவில்லை!
அவமதித்துப்பார்த்தனர், அழிக்க முடியவில்லை!
இன்றோ அடக்கிப் பார்த்தனர்,
அதுவும் முடியவில்லை!

இருக்க இருக்க வைரத்தின் மதிப்பதிகம்!
பழுக்க பழுக்க இரும்பின் வலிமை அதிகம்!
தினம் தினம் தமிழ் திடமாக பிறக்கிறது!
உலகின் ஏதோ ஓர் மூலையில் புதிய பரிணாமம் பெறுகிறது!

தமிழ் அரியணை ஏறும் நாள் தூரமில்லை!
தமிழ் வீடுகளில் வீற்றிருக்கும் நாள் தூரமில்லை!

தாயே தமிழே, நீ வாழி!

-செல்வா